Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 மே 03 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தென்மராட்சி ராமாவில் நலன்புரி நிலையத்திலிருந்து ஒரு தொகுதி மக்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி முல்லைத்தீவு கொக்கிளாய் கருநாட்டங்கேணிப் பகுதியில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேரை முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்த்துவதற்கான அனுமதியை இராணுவத்தினர் வழங்கியுள்ளதாகவும் அவர்கள் மீள்குடியமர்வதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதப் பகுதியில் தென்மராட்சி ராமாவில் நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அவர்களுக்கான வீடுகள் அனைத்தும் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago