2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழ்.வடகடல் நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கம் உதவி

Kogilavani   / 2011 மே 03 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ் குருநகரில் அமைந்துள்ள வடகடல் நிறுவனத்தின் வலைத் தொழிற்சாலைக்கு இந்திய அரசாங்கம் 153 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக வடகடல் நிறுவனத்தின்  தலைவர் வீ.ரங்கன் தெரிவித்துள்ளார்

கடந்த யுத்தகால அனர்த்தங்களில் வடகடல் நிறுவனத்தின் வலைத் தொழிற்சாலை பாரிய சேதமடைந்து அங்கிருந்த பல மில்லியன் ரூபா பொருட்கள் அழிக்கப்பட்டது.

இந் நிதியின் மூலம் வடகடல் நிறுவனத்தின் வலைத் தொழிற்சாலைக் கட்டிடங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை இந்திய அரசாங்கம் மேற்கொள்ளவிருப்பதாக வடகடல் நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X