Suganthini Ratnam / 2011 மே 04 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் உறுதிமொழியைத் தொடர்ந்து இன்று தொடக்கம் வகுப்புப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடுவதாக அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியங்கள்; தெரிவித்துள்ளன.
இன்று புதன்கிழமை தொடக்கம் கல்விச் செயற்பாடுகள் வழமைபோன்று நடைபெறுமெனவும் மாணவர்கள் விரிவுரைகளுக்கு செல்லலாமெனவும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியங்கள் தெரிவித்துள்ளன.
துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட மூன்று பேராசிரியர்கள் அடங்கிய குழுவினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த முடிவு எட்டப்பட்டது.
இந்தக் குழுவின் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவும் துணைவேந்தரின் நல்லெண்ண சமிஞ்ஞை காரணமாகவும் நீதியான தீர்வொன்றை பெற்றுத் தருவாரென்ற நம்பிக்கை காரணமாகவும் நாம் எமது போராட்டத்தை கைவிடுகின்றோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியங்கள் தெரிவித்துள்ளன.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago