2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யாழில் ஓவியக் கண்காட்சி

Menaka Mookandi   / 2011 மே 05 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)  

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதுவராலயம், கொழும்பிலுள்ள இந்திய கலாசார மையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த 'புதுச்சேரிப்புழு' என்ற ஓவியக் கண்காட்சி இன்று யாழ். இந்துக் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியினால் இந்த கண்காட்சி ஆரம்பித்துவைக்கப்பட்டது. தென்னிந்திய ஓவியர்கள் 19பேர் மற்றும் இலங்கை ஓவியர்கள் இருவர் வரைந்த 32 ஓவியங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில், யாழ். துணைத்தூதுவராலய தூதுவர் எஸ்.மகாலிங்கம், வட மாகாண கலை, கலாசார அலுவலர் சிறிதேவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் உட்பட உறுப்பினர்கள், ஓவியக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X