Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 மே 06 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு வெளியிட்டிருக்கும் தருஷ்மன் அறிக்கையைப் பயன்படுத்தி ஜனாதிபதி மஹிந்தவையும் இந்த அரசாங்கத்தையும் பழிவாங்கலாம் என நினைக்கின்றார்கள். அவர்களின் கனவு பலிக்காது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உள்ளூர் சேவை மேம்பாட்டுத் திட்ட அமுலாக்கல் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, ஆளுநரின் செயலாளர் சிவசுவாமி, உள்ளூராட்சி ஆணையாளர் ஜோன்சன், யாழ். நகர மேயர், திணைக்களத் தலைவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது, வறுமைக்கோட்டில் உள்ள மக்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் கூறுகையில்,
'தமிழர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு குறிப்பாக கூட்டமைப்பினருக்கு அறவே விருப்பம் இல்லை. அவர்கள் மக்கள் முன் நடிக்கிறார்கள். தமிழர்களின் வாக்குகளை சுவீகரிப்பதற்காகவும் தங்களது அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதற்காகவுமே தமிழர்கள் முன் தாளம் போடுகிறார்கள்.
ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையை நான் வரவேற்கின்றேன். தமிழர்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் எங்களுக்கு ஒரு நிரந்தர அமைதி வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்து இனப்பிரச்சினையைத் தீர்க்க சினேகபூர்வமாக அரசாங்கத்துடன் பேசி தீர்வைக் காண முடியும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Saleem Saturday, 07 May 2011 07:43 PM
ஒருவரையும் பழிவாங்கும் நோக்கம் பொதுவாக தமிழர்களுக்கு இல்லை.
Reply : 0 0
Anbu Sunday, 08 May 2011 12:07 AM
Then why haven't you got a political solution after all these years being a minister in the SL Govt?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .