2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் முதியவர் பலி: சடலத்தை பொறுப்பேற்க பொலிஸார் கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 ஜூலை 03 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்,கிரிசன்)

திருநெல்வேலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான முதியவரின் சடலத்தை உறவினர்கள் எவராவது பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு கோப்பாய் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி நகரப் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கோப்பாய்ப் பொலிஸார், முதியவரொருவரின்  சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

குறித்த முதியவர் புத்தி சுவாதீனமற்ற நிலையில் நடமாடியதாகவும் இவரை நள்ளிரவில் சென்ற வாகனமொன்று மோதியதால் பலியானதாகவும்  கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 70 வயது மதிக்கத்தக்க காந்தமுத்து நடராசா என்ற முதியவரே இந்த விபத்தில் பலியானதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X