2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ். உள்ளுராட்சி தேர்தலில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகள் குறித்து முக்கிய சந்திப்பு

Kogilavani   / 2011 ஜூலை 12 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ். உள்ளுராட்சி தேர்தலில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகள் குறித்து பாதுகாப்பு தரப்பினருடனும் கட்சி முக்கியஸ்தர்களுடன் விஷேட சந்திப்பு ஒன்று நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.கருணாநிதி தெரிவித்தார்.

பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தலைமையில்  நடைபெறும் இவ்விஷேட சந்திப்பில்  யாழ். மாவட்டத்துக்குப் பொறுப்பான உயர் இராணுவ, பொலிஸ் அதிகாரிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஏனைய கட்சி முக்கியஸ்தர்கள், சுயேட்சைக்குழுப் பிரதிநிதிகள்,  யாழ். தேர்தல் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X