2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மினி பஸ் தரம்புரண்டதில் நால்வர் படு காயம்

Super User   / 2011 செப்டெம்பர் 10 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

கொடிகாமத்திலிருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான மினி பஸ் இன்று சனிக்கிழமை காலை யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் தடம்புரண்டமையால் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர.;

காயமடைந்த நான்கு பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மினி பஸ் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த மினி பஸ் மாவட்ட செயலகத்தை அண்மித்த போது முன்னால் வந்த வாகனத்திற்கு இடமளிக் முற்பட்டுள்ளது. இதன்போது கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றுடன் மோதி; தடம்புரண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X