2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அநுராதபுரம் மாநகர சபையின் புதிய மேயராக எச்.பீ.சோமதாஸ பதவியேற்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                               

அநுராதபுரம் மாநகர சபையின் புதிய மேயராக எச்.பீ.சோமதாஸ இன்று காலை  தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

அநுராதபுரம் மாநகர சபையின் பிரதி மேயராகக் கடமை வகித்த இவர் கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற மாநகர சபைத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அநுராதபுரம் மாநகர சபையின் புதிய மேயராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

அநுராதபுரம் மாநகர சபையின் மூன்றாவது மேயராகவே எச்.பீ.சோமதாஸ கடமையேற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X