Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 27 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து மீட்கப்பட்ட சைக்கிள்களுக்கான உரிமையாளர்கள் தெல்லிப்பழை குற்றத்தடுப்பு பிரிவினருடன் தொடர்புகொண்டு தமது சைக்கிள்களுக்கான அடையாளங்களை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மல்லாகம் கோணப்புலம் முகாமிலுள்ள நபரொருவர் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் தெல்லிப்பழை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து ஐந்து சைக்கிள்கள் மீட்கப்பட்டிருந்தன. இதில் இரு சைக்கிள்களுக்கான உரிமையாளர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தி தமது சைக்கிள்களை பெற்றுச் சென்றுள்ளனர். இருப்பினும் மூன்று சைக்கிள்கள் எவராலும் உரிமை கோரப்படாது காணப்படுவதாகவும் இந்த சைக்கிள்களுக்கான உரிமையாளர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தி சைக்கிள்களை பெற்றுச்செல்லுமாறும் தெல்லிப்பழை குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
22 minute ago
28 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
44 minute ago
1 hours ago