2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீதி அகலமாக்கல் பணிகளுக்காக யாழில் மின்தடை

Super User   / 2011 நவம்பர் 04 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வீதி அகலமாக்கல் பணிகளுக்காக உயர்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் அடுத்த வாரத்தில் மின்சாரத் தடங்கல் ஏற்படும் என யாழ்ப்பாண பிரதேச மின் பொறியிலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி,   07.11.2011 திங்கட்கிழமை, 09.11.2011 புதன்;கிழமை, 12.11.2011 சனிக்கிழமை மற்றும் 14.11.2011 திங்கட்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை சுன்னாகம், மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம், புன்னாலைக்கட்டுவன் வடக்கு தெற்கு, மயிலங்காடு பிரதேசத்தின் ஒரு பகுதி, ஈவினை பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும்,

08.11.2011 செவ்வாய்க்கிழமை, 11.11.2011 வெள்ளிக்கிழமை, 13.11.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X