2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தள அறிமுக விழா

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 27 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தள அறிமுக விழா நேற்று சனிக்கிழமை பிசப் சவுந்தரம் மீடியா நிலையத்தில் நடைபெற்றது.  யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருள் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் பிரதம விருந்தினராக இதில் கலந்து கொண்டார்.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேராலும் குருக்கள் பேராலும் வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார், தமிழ் கத்தோலிக்க செய்திகளை அறிக்கையிட உருவாக்கப்பட்ட  தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தள முயற்சி வரவேற்கப்படவேண்டியதாகும். இவ்விணையத்தளம் சிறப்பான விதமாக வளர்ந்து பணிபுரியப்போவதாக கூறினார்.

இலங்கை மறைமாவட்டங்களின் தமிழ் கத்தோலிக்க செய்திகளை உத்தியோகபூர்வமாக அறிக்கையிடும் ஓர் இணையத்தளமாக இது செயல்ப்படும். இலங்கைத் தமிழ் கத்தோலிக்க மறைமாவட்டங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் செய்திகளையும் இவ்விணையத்தளத்தில் முழுமையாகப் பெற்றுக்கொள்ளலாம். இத்தள முயற்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்கள் இணைத்துக்கொள்ளக்கூடிய தகவல்கள் வரவேற்கப்படும். இத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களையும் எதிர்பார்ப்புக்களையும் இணையத்தள மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்த முடியுமென பிசப் சவுந்தரம் மீடியா இயக்குநரும் தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தள ஆசிரியருமான அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார் தெரிவித்தார்.

இவ்விணையத்தளத்தை tcnlnet.com  எனும் முகவரியில் பார்வையிட முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .