2025 மே 17, சனிக்கிழமை

யாழ். குடாநாட்டுக்கு கடல் மார்கமாக போதைப்பொருள் கடத்தல்: எஸ்.ரவீந்திரன்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 09 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.குடாநாட்டிற்கு கடல் மார்கமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக யாழ்.பிராந்திய நீரியல் வளத்துறைத் திணைக்களப் பணிப்பாளர் எஸ.;ரவீந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.பிராந்திய நீரியல் வளத்துறைத் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடல் பிராந்தியத்திலிருந்து நெடுந்தீவு, மாதகல், பருத்தித்துறை முனை கடல் பிராந்தியங்களில் இருந்து போதைப் பொருள் யாழுக்கு கடல் மார்கமாக கடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இந்தியாவில் இருந்து நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாதகல் கடற் பகுதியில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்.குடாக்கடலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் 40 குதிரை வலு கொண்ட வெளியிணைப்பு இயந்திரங்களின் மூலம் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் இந்தியாவில் இருந்து போதைப் பொருட்களை கடல் மார்க்கமாக கடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

யாழுக்கு கடல் மார்க்கமாக கடத்தப்படும் போதைப் பொருள் தொடர்பாக கடற்படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கும் படி யாழ்.கடற்படைக் கட்டளைத் தளபதியிடம் கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0

  • RAMKUMAR Friday, 09 December 2011 10:16 PM

    கட்டாயம் நடவடிக்கை எடுத்து எமது சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .