2025 மே 17, சனிக்கிழமை

காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு யாழில் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 10 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,கிரிசன்)

மனித உரிமைகள் தினமான இன்று சனிக்கிழமை காணாமல்ப்போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி அவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். 

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல்  போனவர்களின் உறவினர்கள், காணாமல்ப்போன தமது உறவினர்களின் புகைப்படங்களையும் சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • suran Saturday, 10 December 2011 04:54 PM

    இதனை பிரபாகரனிடம் சொல்லுங்கள் , அதுதான் நியாயமானது .

    Reply : 0       0

    j.sanjai Saturday, 10 December 2011 07:31 PM

    சூரன், தமிழர்கள் கடத்தப்படுவது இது வரையும் முற்றுப் பெறவில்லை என்பது உமக்கு தெரியாத? கொழும்பு கொச்சிக்கடையில் என்ன ஐயா நடந்தது கருத்தை நிதானமாக தெரிவிக்க வேண்டும்

    Reply : 0       0

    ilakijan Saturday, 10 December 2011 07:56 PM

    சூரன்! பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு சொல்லும் நியாயமா !

    Reply : 0       0

    suran Saturday, 10 December 2011 09:04 PM

    மூவினத்தினரும் கடத்தப்படுகின்றனர். தமிழன் மட்டுமல்ல, sanjai

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .