2025 மே 16, வெள்ளிக்கிழமை

யாழ். தமிழ், பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

Kogilavani   / 2012 ஜனவரி 26 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். ஸ்ரீ நாக விகாரையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் யாழ்.தமிழ், பௌத்த சங்கமானது 100 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் புத்தக பைகளை இலவசமாக வழங்கி வைத்தது.

யாழ். ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல தேரோ மற்றும் ரவிக்குமார்,  யாழ். தமிழ், பௌத்த சங்கத்தின் தலைவர் மஹாமிதவ பக்னரதண தேரோ, ஜனாதிபதி அலுவலகத்தின் சம்புத்தத்வ ஜெயந்தி விரிவாக்க அலுவர் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் உதயன், யாழ்.கட்டளை தளபதி மேயர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, 51ஆவது படை பிரிவின் அதிகாரிகள், மற்றும் தமிழ், பௌத்த சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.



 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .