2025 மே 17, சனிக்கிழமை

நகைகளைத் திருடி வங்கியில் அடகு வைத்த நபருக்கு சிறைத்தண்டனை

Suganthini Ratnam   / 2012 மார்ச் 21 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து 175,000 ரூபா பெறுமதியான தங்கநகைகளைத் திருடி வங்கியில் அடகு வைத்த நபரொருவருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம்  6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மேற்படி நபர் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அநுராதபுரம் அகட்டஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த நபருக்கே   இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

கடந்த 10.01.2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாட்டின் வீதிப் பகுதியிலுள்ள வீடொன்றினுள்  அத்துமீறி நுழைந்த மேற்படி நபர்,  வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தி தங்கநகைகளைத் திருடிக்கொண்டு தலைமறைவாகியிருந்தார்.  மேற்படி நபர்  திருடிய தங்கநகைகளை வங்கியில் அடகு வைத்தமை தொடர்பில் யாழ். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது தெரியவந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .