2025 மே 17, சனிக்கிழமை

யாழ். குடாக் கடலை மேவும் நடவடிக்கை ஆரம்பம்

Kogilavani   / 2012 மார்ச் 21 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.குடா கரையோரப் பகுதிகளான குரநகர், பாஷையூர், கொழும்புத்துறை மற்றும் நாவாந்துரை பகுதிகளில் உள்ள கடற்கரை பகுதியை 100 மீற்றர் வரை மணலினால் நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக  யாழ்.பிரதேச செயலகம் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

யாழ்.குடாமக்களின் போக்குவரத்திற்காக கரையேரப்பகுதிகளில் வீதி அகலிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கடலை மேவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் அப்பகுதியில் மக்களின் போக்குவரத்திற்காக புதிய வீதிகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த கடல் மேவும் நடவடிக்கையின் காரணமாக மக்களின் போக்குவரத்துக்கள் இலகுபடுத்தப்படும்; என யாழ்.பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .