2025 மே 17, சனிக்கிழமை

யாழ். பல்கலை மாணவன் கடலில் மூழ்கி மரணம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 29 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்த மூன்றாம் வருட மாணவர் ஒருவர்  கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

அந்தோனிப்பிள்ளை றெஜினோலட் எட்மன் (வயது 27) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

நேற்று புதன்கிழமை வடமராட்சிக் கடலில் நீராடுவதற்காக தனது குடும்பத்தினருடன் சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக பருத்தித்துறைப் பொலிஸார் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
 
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .