2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் தடை

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயரழுத்த மற்றும் தாழழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்ய வேண்டியிருப்பதாலும் கட்டமைப்பு வேலைகள் மற்றும் பராமரிப்பு வேலைகள் செய்யவேண்டியிருப்பதாலும் பின்வரும் பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ். பிராந்திய மின்சாரசபை அறிவித்துள்ளது

04.04.2012 புதன்;கிழமை, 06.04.2012 வெள்ளிக்கிழமை மற்றும் 08.04.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் 03.04.2012 செவ்வாய்க்கிழமை, 05.04.2012 வியாழக்கிழமை மற்றும் 07.04.2012 சனிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடமாவடிப்பகுதி, பாற்பண்ணைப்பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவபீடப்பிரதேசம், ஆடியபாதம் வீதி கொக்குவில் சந்தி வரையான பிரதேசம், கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும்;

02.04.2012 திங்கட்க்கிழமை மற்றும் 06.04.2012 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை மருதனார்மடம், இனுவில், தாவடி, கோண்டாவில் மேற்கு, சுதுமலை, கே.கே.எஸ் வீதியில் குளப்பிட்டி சந்தி வரையான கொக்குவிலின் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும்

08.04.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை பிரதம தபாலக பகுதி, ஸ்ரீலங்கா ரெலிகொம் பகுதி, யாழ் பிரதான வீதியில் பண்ணையிலிருந்து புங்கங்குளம் வரையான பிரதேசம், கச்சேரிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .