2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீதி அகலிப்பு பணிகளையொட்டி மின்விநியோகம் தடைப்படும்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் வீதி அகலிப்பு பணிகளை முன்னிட்டு  மின்விநியோக மார்க்கங்களை இடமாற்ற வேண்டியுள்ளதாலும் கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ். பிராந்திய மின்சாரசபை அறிவித்துள்ளது

இன்று திங்கட்கிழமை, நாளைமறுதினம் புதன்கிழமை சனிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம், தொட்டிலடி முதல் சங்கானை வரையான பிரதேசம், கந்தரோடையிலிருந்து மாகியப்பிட்டி வரையான பிரதேசம், சங்கானைச் சந்தியிலிருந்து சித்தங்கேணியூடாக வட்டுகோட்டை வரையான பிரதேசம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்படும்  

நாளை செவ்வாய்க்கிழமை,  சனி;க்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடமாவடிப்பகுதி, பாற்பண்ணைப்பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவபீடப் பிரதேசம், ஆடியபாதம் வீதி, கொக்குவில் சந்தி வரையான பிரதேசம், கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்படும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை கொக்குவில் பிரதேசத்தின் ஒரு பகுதி, நாச்சிமார் கோவிலடி, கோம்பயன்மணல் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்படும் என யாழ். பிராந்திய மின்சாரசபை தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .