2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கென்டர் வாகனம் மோதி இராணுவ காவலரண் தகர்ப்பு; நால்வர் காயம்

Super User   / 2012 ஏப்ரல் 09 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ- 9 வீதியில் பளை நகரில் பயணித்துக் கொண்டிருந்த கென்டர் ரக லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலுள்ள இராணுவ காவலரணை தகர்த்துள்ளது.

இதனால் குறித்த காவலரணில் கடமையாற்றிக்கொண்டிருந்த இரண்டு இராணுவத்தினர் மற்றும் கென்டர் ரக வாகனத்தில் பயணித்த இருவர் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் இராணுவத்தினர் இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .