2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாதகல் கடலில் நீராடியவர் நீரில் மூழ்கி மரணம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 10 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். மாதகல் கடலில் நண்பர்களுடன் கடலில் நீராடியவர் அலையினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இன்று செவ்வாய்கிழமை இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். சில்லாலை, பண்டத்தரிப்பைச் சேர்ந்த முதியவரான இன்னாசிமுத்து இமானுவேல் (வயது 63) என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்தவராவர்.

இவரது சடலம் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரினால் கொண்டுவரப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பாக இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .