2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். குடாக்கடலில் மின்னல் தாக்கியதில் படகு தீப்பிடித்தது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 14 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.குடாக்கடல் பகுதியில் பரவலாக இடி, மின்னல் தாக்கியுள்ளதாகவும் இதில் பாஷையுர் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக படகு ஒன்று தீபிடித்து எரிந்துள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் யாழில் பல பிரதேசங்களில் இடியும் மின்னலும் பாரிய சத்தத்துடன் கேட்டுள்ளது. இதேவேளை யாழ்.மூளாய் மருத்துவமனையில் இன்று நண்பகல், இடி, மின்னல் தாக்கியுள்ளதாக அவ் வைத்தியசாலை நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மின்னல் தாக்கம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் இருந்த தென்னைமரங்கள் எரிந்துள்ளதாகவும் தொலைத் தொடர்பு கருவி ஒன்றும் சேதமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் குடாக்கடல் மீனவர்கள் பலர் இடி, மின்னல் காரணமாக கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .