2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மிதிவெடி வெடித்ததில் ஒருவர் கால் இழப்பு மற்றையவர் படுகாயம்

Super User   / 2012 ஏப்ரல் 16 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.கிளாலி பகுதியில் மிதிவெடி வெடித்ததில் இளைஞர் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளாலிப் பகுதியிலுள்ள காணி ஒன்றை இன்று திங்கட்கிழமை துப்பரவு செய்த இரு இளைஞர்களுமே குறித்த மிதிவெடியில் சிக்கியுள்ளனர்.

இதனால் ஒருவரின் முழங்காலின் கீழ் பகுதியை முழுமையாக இழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .