2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பருத்தித்துறை மீனவர்கள் இருவரை விடுதலை செய்ய கோரிக்கை

Super User   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். பருத்தித்துறை சுப்பர் மடத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.

இவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு ஒரு மாதமாகியுள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்யக் கோரி பருத்தித்துறை சுப்பரமணியம் கடற்றொழிலாளர் சங்கத்தினர் யாழ். பிராந்திய கடற்றொழில் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

சிவாஜி பிரபு மற்றும் ராமமூர்த்தி அகிய இரு மீனவர்களே இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனN;ற மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்த மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் இந்திய ஆழ்கடல் மீன்பிடி  படகுகளில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை சிறைப்பிடிப்போம் என தெரிவித்துள்ளதாக யாழ். பிராந்திய கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் எஸ். கணேசமூர்த்தி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .