2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நெடுந்தீவு மாணவி கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 17 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். நெடுந்தீவில் 13 வயது மாணவியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை இம்மாதம் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இச்சந்தேக நபர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் மீண்டும் ஆஜராகி இருக்கவில்லை. பாலியல் வல்லுறவுக்குப் பின் கொலை செய்யப்பட்ட மாணவியின் சகோதரன் தமது தமது வாய்மூல வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.

பாலியல் மற்றும் கொலைச் சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகாத காரணத்தாலும் கொலை மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளன சிறுமியின் சகோதரர்களின் வாக் மூலம் நிறைவடையாமையினால் சந்தேக நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஆர்.வி.மகேந்திரராஜா உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .