2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பச்சிலைப்பள்ளியில் மீள்குடியேற்றம்: முருகேசு சந்திரகுமார் எம்.பி அறிவிப்பு

Super User   / 2012 ஏப்ரல் 23 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹேமந்த்)


பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிலுள்ள மேலும் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளில் எதிர்வரும் 15ஆம் திகதி பொதுமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

கண்ணிவெடி அகற்றப்படும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிய இத்தாவில், வேம்போடு கேணி ஆகிய பிரதேசங்களிலேயே மக்களை  குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பிரதேசத்தில் மக்கள் மீளக்குடியேறக் கூடிய நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மீளக்குடியேறும் மக்களுக்கான தற்காலிக வீடுகள், குடிநீர் வசதி, வாழ்வாதார உதவிகள் மற்றும் உட்கட்டமைப்பு போன்றவற்றை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் கூறினார்.

இதேவேளை, மீள்குடியேற்றம் நடைபெறவுள்ள பிரதேசத்தை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் சத்தியசீலன், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ஹலோ ட்றஸ்ற் நிறுவனத்தினர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட பலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .