2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரு கைதிகளுக்கிடையிலான மோதலில் ஒருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 24 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரு கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். சிறைச்சாலை பிரதம அதிகாரி எஸ்.இந்திரகுமார் தெரிவித்துள்ளார.

குளிப்பதற்காக கைதிகள் கிணற்றில் நின்றபோது மேற்படி இரு கைதிகளுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பதாக மாறியதாகவும் இதன்போது கைதியொருவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .