2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஸ்பிரே பெயின்ற் கலன் வெடித்து குடும்பஸ்தர் பலி

Suganthini Ratnam   / 2012 மே 11 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கழிவுப் பொருட்களை எரிக்கும்போது அதிலிருந்த ஸ்பிரே பெயின்ற் கலன் வெடித்துச் சிதறியதில் குடும்பஸ்தரொருவர் மரணமடைந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவாலி தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த அன்ரனி குரூஸ் (வயது 68) என்பவரே மரணமடைந்தவராவார்.

இவரது உடம்பில் எரிகாயங்கள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X