2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                             (ஜெ.டானியல்)
யாழ். பேருந்து நிலையத்திற்குள் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகர், ஒய்வு பெற்ற போக்குவரத்து சபை ஊழியரான நாகலிங்கம் பாலேந்திரன் (வயது 70) என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான பஸ் வண்டியில் மோதுண்டு மேற்படி முதியவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

இச்சம்பவத்துடன் தொடரபில் குறித்த பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X