2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகளின் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒத்தி வைப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                     (ரஜனி)
உயர் தேசிய கணக்கியல் முகாமைத்துவ பட்டதாரிகளினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்லூரி கணக்கியல் முகாமைத்துவ சங்கத்தினர் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தனர்.

உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகள் 228 பேர் பட்டதாரி பயிலுனர் ஆட்சேர்ப்பில் யாழ்.மாவட்ட பட்டதரிகள் இணைத்துக் கொள்ளப்படாமை குறித்து கடந்த மாதம் 31 ஆம் திகதி உயர் நீதிமன்றில் தனித்தனியாக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

பட்டதாரிகள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சுமந்திரன் பட்டதாரி பயிலுனர் ஆட்சேர்ப்பில் இணைத்துக் கொள்ளப்படாமைக்கான காரணத்தினை தீர்க்கமான முறையில் விசாரணை மேற்கொண்டு பட்டதாரிகள் பயிலுனர் ஆட்சேர்ப்பில் இணைத்துக் கொள்ளும் வகையில் விசாரணைகள் இடம்பெற வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேற்படி வழக்கினை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்ற குழுவினர் வழக்கினை  7ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .