2025 மே 20, செவ்வாய்க்கிழமை

லேகியம், மூக்குப்பொடி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 07 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

தடை செய்யப்பட்ட  மூக்குப்பொடி, மற்றும் லேகியம் விற்பனை செய்த இருவருக்கு 6 ஆறாயிரம் ரூபா அபராதம் விதிக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நல்லூர் பகுதியில் இன்று யாழ். மதுவரி நிலையத்தினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது குறித்த பகுதியில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூக்குப்பொடி மற்றும் லேகியம் விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்விரு வர்த்தகர்களும் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தலா மூவாயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X