2025 ஜூன் 21, சனிக்கிழமை

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 04 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி பகுதியில் பாவணையாளர் அதிகார சபையினால் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாவணையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் இன்று தழிழ்மிரருக்கு தெரிவித்தார்.

பருத்தித்துறை பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் வேண்டுகோளுக்கு இணங்க வல்லிபுரம் ஆழ்வார் கோவில் வளாகத்தில் பாவணையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையின் போது நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்த வர்த்தகர்கள் 14 பேருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை, சாவகச்சேரி பகுதியில் காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்த வர்த்தகர்கள் 6 பேருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களுக்கான வழக்குகள் எதிர்வரும் நாட்களில் சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .