2025 ஜூன் 21, சனிக்கிழமை

பயனாளிகளுக்கு வழங்க சேகரிக்கப்பட்ட நிதி குறித்து பயனாளிகள் கேள்வி: பதில் தெரிவிக்க சமுர்த்தி அதிகாரி

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 18 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

சமுர்த்தி அபிவிருத்தி சங்கத்தினால் வறிய மக்களுக்கு உதவி செய்வதற்காக சேகரிக்கப்பட்ட நிதியானது பயனாளிகளுக்கு சென்றடையவில்லையென மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

திவிநெகும சட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரி நேற்று யாழ். நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது, இவ்விடயம் குறித்து தமிழ்மிரருக்கு மக்கள் தெரிவிக்கையில்...

கொடிவாரத்தினை முன்னிட்டு சமுர்த்தி அதிகார சபையினால் நிதி சேகரிக்கப்பட்டு வந்தது. இந்த நிதி வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு உதவுவதற்கென தெரிவித்து சேகரிக்கப்பட்டது.

ஆனால், அந்த நிதி எந்த மக்களுக்கும் வழங்கப்படவில்லை. இந்த நிதி குறித்து சமுர்த்தி அதிகாரிகளிடம் கேட்டபோது, சமுர்த்தி அதிகாரிகள் மழுப்புவதாகவும், தம்மை ஏமாற்றுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் சம்பந்தமாக மாவட்ட சமுர்த்தி அதிகார சபையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, வறுமைப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிதி சேகரிக்கப்பட்டதாகவும், அதனை உரிய இடத்தில் வைப்பு செய்யப்பட்டதாகவும் சமுர்த்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தபோதிலும் அது எங்கு வைப்பு செய்யப்பட்டுள்ளதென்றும், அது எப்போது மக்களுக்கு வழங்கப்படவுள்ளதென்றும் தெரிவிக்க சமுர்த்தி அதகார சபை அதிகாரிகள் மறுக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .