2025 ஜூன் 21, சனிக்கிழமை

காணி மற்றும் கல்வி விடயங்கள் குறித்து முறைப்பாடுகள் பதிவு: த.கனகராஜ்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 18 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜ் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தின் செயற்பாடுகள் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதன்போது, கல்வி மற்றும் காணி, பதவி உயர்வு போன்ற விடயங்கள் குறித்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்கான விசாரணைகள் விரைவில் உரியவர்களிடம் மேற்கொண்டு முறைப்பாட்டாளர்களுக்கான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படுமென்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .