2025 ஜூன் 21, சனிக்கிழமை

உள்ளக ஆசிரிய இடமாற்றத்திற்கு ஜனநாயக தொழிலாளர் கட்சி கண்டனம்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 19 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம் அறிவிக்கப்பட்டமையை கண்டித்து ஜனநாயக தொழிலாளர் கட்சி கண்டனம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கட்சியின் தலைவர் சத்தியேந்ராவினால் விடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன...

வலிகாமம் கல்வி வலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் உள்ளக இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக திடீர் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஜனநாயக தொழிலாளர் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

டிசெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு மாணவர்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், தீடீரென விடுக்கப்படும் இவ்வாறான அறிவித்தல்களால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம்.

ஒரே பாடசாலையில் தொடர்ந்து ஏழு வருடங்களுக்கும் மேல் பணியாற்றிய ஆசிரியர்கள் இடம் மாற்றப்படவுள்ளனர். குறிப்பாக, வலிகாமம் கல்வி வலயத்தில் அவ்வாறு உள்ளக இடமாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்தில் அவ்வாறு சுமார் 108 ஆசிரியர்கள் இடமாற்றம் பெறவுள்ளனர். வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளர் ஆர்.இராஜேந்திரன் தலைமையில் வலிகாமம் கல்வி வலய மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற அதிபர்களுடனான கலந்துரையாடலில் இது பற்றிய அறிவிப்புவிடுக்கப்பட்டது.

இதன்போதே இடமாற்றம் பெறவுள்ள ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியலும் அறிவிக்கப்பட்டது. போதிய கால அவகாசமின்றி இவ்வாறு இடமாற்ற உத்தரவு விடுக்கப்பட்டிருப்பது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சை டிசெம்பரில் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறான திடீர் இடமாற்றங்களால், அவர்களின் கல்வித் தொடர்ச்சித்தன்மை பாதிக்கப்பட்டு விடும் என்றும் மேற்படி ஆசியரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது பற்றி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் - ஐனநாயக தொழிலாளர் கட்சியிடம் முறையிட்டுள்ளனர்.

எனவே இவ்விடயம் குறித்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவினதும் கவனத்துக்குக் கொண்டு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்  பெற்றுத்தருவோம் என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .