2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வட மாகாண நிர்வாக புதிய சட்ட ஆலோசகராக எஸ்.எல்.ஏ.ரஷீட் நியமனம்

Kogilavani   / 2012 நவம்பர் 06 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


வட மாகாண நிர்வாகத்துக்கான புதிய சட்ட ஆலோசகராக சட்டத்தரணி எஸ்.எல்.ஏ.ரஷீட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தினை வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

இலங்கை சட்டக் கல்லூரியில் தனது கற்கையினை முடித்துக் கொண்டு, 1996ஆம் ஆண்டு வெளியேறிய ரஷீட் - தற்போது பிரபல சட்டத்தரணியாக கடமையாற்றி வருகின்றார்.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இவர் அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார்.

இதேபோன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையும் இவர் செயற்பட்டார்.

வட மாகாண நிர்வாகத்துக்கான புதிய சட்ட ஆலோசகராக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி எஸ்.எல்.ஏ.ரஷீட்  அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார்.                                                   

You May Also Like

  Comments - 0

  • Imran Tuesday, 06 November 2012 06:43 AM

    எல்லாப் புகலும் இறைவனுக்கே,

    Reply : 0       0

    mansoor a.cader Tuesday, 06 November 2012 07:22 AM

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .