2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கொலை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கல்

Super User   / 2012 நவம்பர் 07 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த 28.08.2011 கிருஸ்ணமூர்த்தி சாளினி என்ற சிறுமியை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வட்டுக் கோட்டை பொலிஸாரினால் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுமார் ஒரு வருடமாக  சிறைத் தண்டணை அநுபவித்து வந்த சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த தவம் சுரேஸ்குமார் மற்றும் முருகேசு கேதீஸ்வரன் ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது, யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் இருவரையும் தலா 50,000 காசு பிணையிலும் தலா 2 லட்சம் பெறுமதியான 4 ஆட் பிணையிலும் செல்ல அனுமதித்தார்.

 மேலும், பருத்தித்துறை தும்பளை பகுதியில் பெண் ஒருவரை கடத்தி கொலை செய்த அதே இடத்தினைச் சேர்ந்த இராசையா இராசரூபன் மற்றும் பி.மாணிக்கதாஸ் ஆகிய இருவருக்கும் தலா 50,000 ரூபா காசு பிணையிலும் 2 லட்சம் ரூபா பெறுமதியான 4 ஆட் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .