2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலை மாணவர்கள் நால்வர் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 01 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் நால்வரையும் கொழும்புக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் தற்போது அவர்களிடம் வவுனியா பிரதேசத்தில் வைத்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

ஸ்ரீடெலோ காரியாலத்தின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக சந்தேகத்தின் பேரில் மேற்படி நான்கு மாணவர்களும் கோப்பாய் பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்டிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களான பிரசாந்த், ஜெனமஜெயந்த், விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவரான சொலமன் மற்றும் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சுதர்சன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்களில் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலும் ஏனைய இருவரும் நேற்றிரவும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியதன் பின்னரே இவர்கள் நால்வரையும் கொழும்புக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீடெலோ காரியாலயத்தின் மீது கடந்த புதன்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள் ...


ஸ்ரீடெலோ காரியாலய தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது


ஸ்ரீடெலோ காரியாலயம் மீது பெற்றோல் குண்டு வீச்சு

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .