2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

தமிழ்க் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 01 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)


கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளரையும், மாணவர்களையும் உடனே விடுதலை செய்யுமாறு கோரியும், பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியமையும், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 4ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தீர்மானித்துள்ளதாக தமிழரசு கட்சியின் துணைச்செயலாளர் சீ.வி.கே சிவஞானம் இன்று தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை எதிர்வரும் 3ஆம் திகதி திங்கட்கிழமை நடாத்தபோவதாக அறிவித்திருந்தது. அத்துடன், கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் மக்கள் முண்னணி தனது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்தவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்ட தினங்கள் வேறுபட்டாலும், நோக்கங்கள் இரண்டும் ஒன்றாக இருந்த காரணத்தினால், இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்த இருப்பதாக அவர் கூறினார்.
இவ்வொருங்கிணைந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், கட்சி பேதங்கள் மற்றும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சகல பொது நிறுவனங்களும், பொது அமைப்புக்களும், பொதுமக்களும் தம்மோடு இணைந்த கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .