2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

அதிகாரிகளாக நடித்து கப்பம் பெற்ற இருவர் கைது

Kanagaraj   / 2012 டிசெம்பர் 02 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகர்வோர் அதிகார சபையையின் அதிகாரிகள் எனக் கூறி வர்த்தக நிலையங்களில் கப்பம் பெற்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவுல பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்ற இவ்விருவரும் பொருட்களின் விலைகளை விசாரித்துள்ளனர்.

நுகர்வோர் அதிகார சபையின் நிர்ணயித்த விலையில் அந்த பொருட்களின் விலைகள் இல்லை என தெரிவித்ததுடன் தாங்கள் இருவரும்  நுகர்வோர் அதிகார சபையை அதிகாரிகள் எனக் கூறி வர்த்தக நிலையங்களுக்கு அபராதமும் விதித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கான விலைப் பட்டியல் நுகர்வோருக்கு காட்சிப்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிகாட்டி அதற்கும் அபராதம் விதித்துள்ளனர்.

இவ்விருவரும் ஒவ்வொரு வர்த்தக நிலையங்களுக்கும் ஆயிரம் ரூபா முதல் 5,000 ரூபாவரை அபராதம் விதித்துள்ளனர். இவ்விருவர் தொடர்பிலும் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்தே இவ்விருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை நடத்திய போது அவ்விருவரும் நுகர்வோர் அதிகார சபையை அதிகாரிகள் இல்லை என்பது தெரியவந்தது.


You May Also Like

  Comments - 0

  • kalifa Sunday, 02 December 2012 11:47 PM

    Athikari yaru Ayokkiyan yarunne vilangkuthillappa..but visaranaikal mudukki vidappadum?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .