2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் காயம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்,சுமித்தி)

யாழ்ப்பாணம் கைதடிப்பகுதியில் இன்று திங்கட்கிழமை இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியுள்ளது விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.00  மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முல்லைத்தீவு நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த அரச  பேரூந்தும் சுற்றுலாவிற்காக கொழும்பு சென்று யாழ்ப்பாணம்  திரும்பிக்கொண்டிருந்த  பேரூந்து தைத்தடிப் பாலத்திற்கு அருகில்  விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
காயமடைந்த இருவரும் யாழ் போதனாவைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் சாவக்கச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .