2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலை மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு கண்டனம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 03 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். பல்கலைகழக மருத்துவ பீட மாணவர் உட்பட 4 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து யாழ். அரச மருத்துவ சங்கத்தினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
 
இதனால் பல்கலைக்கழக மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகளும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் அச்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் விரைவாகச் செயற்பட்டு கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் உடனே விடுதலை செய்வதன் மூலம், யாழ். பல்கலைக்கழகத்தின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் சுமூகமான நிலைக்கு மாறுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் யாழ். அரச மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .