2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வட மாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்: சுரேஸ் எம்.பி

Super User   / 2012 டிசெம்பர் 04 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)


சுமார் இரண்டு லட்ச இராணுவத்தில், வடபகுதியில் மட்டும் 1,50000 இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய கோரியும், பல்கலைக்கழகத்தினுள் இராணுவத்தினரின் அத்துமீறலை கண்டித்தும் யாழ். பஸ் நிலையத்தில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது இவ்வாறு சுட்டிக்காட்டினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படாவிடில், இங்கு ஜனநாயக சூழல் இருக்குமென நாம்  எதிர்பார்க்க முடியாது. யுத்தம் முடிவடைந்த 3 வருடத்தின் மேலாக இந்த சூழலில் இராணுவம் இந்த மண்ணைவிட்டு வெளியேற வேண்டும்.

இராணுவத்திற்கு இங்கே எந்தவிதமான வேலையும் கிடையாது. ஆகவே, இதனை இங்கும் சரி வெளிநாடுகளிலும் சரி, இந்த விடயம் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டு, இராணுவம் இந்த மண்ணைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .