2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழில் அரச உத்தியோகஸ்தர்களுக்காக சுற்றுலா விடுதி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் யாழ் மாநகர சபை ஆகிய இணைந்து யாழ்ப்பாணத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான சுற்றுலா விடுதி அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சுற்றுலா விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் முத்தமிழ் வெளியில் இடம்பெற்றது.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டிவைத்தனர்.

இந்த நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவர், யாழ் மாவட்ட சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் அங்கஜன், மாநகர சபை உத்தியோகஸ்தர்கள், படையினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

250 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த சுற்றுலா விடுதியில் மிகக்குறைந்த செலவில் சேவையைப் பெறக்கூடியதாக இருப்பதோடு இந்த விடுதிக்குள் ஒரே தடவையில் 150 பேர் பயன்படுத்தக்கூடிய ரெஸ்டூரன்ட் ஒன்றும் அமைப்படவுள்ளதாக யாழ் மேயர் தெரிவித்தார்.

அத்துடன் சுற்றுலா விடுதி அமைக்கப்படவுள்ள பகுதியில் 28 குடும்பங்கள் இருந்து குடியிருந்ததாகவும் இந்த சுற்றுலா விடுதி அமைப்பதற்காக நிரந்தரமாக அமைக்கப்பட்ட வீடுகள் யாவும் இடிக்கப்பட்டு இங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .