2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

விபத்தில் தாயும் பிள்ளையும் படுகாயம்

Super User   / 2012 டிசெம்பர் 06 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)


மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் பிள்ளையும் மிக  ஆபத்தான நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில் மல்லாகம் சந்தியில் இடம்பெற்றது.யாழ்ப்பாணத்தில் இருந்து மல்லாகம் நோக்கி வந்த வேனொன்று மல்லாகம் சந்தியில் நின்ற பொலிஸாரை கண்டதும் மிகவும் விரைவாக நீதிமன்ற வீதியிக்கு திருப்பப்பட்டுள்ளது.

இதன்போது வீதியின் அருகே இருந்த தபால் பெட்டியுடன் மோதுண்டு எதிரே சைக்கிளில் தாயும் பிள்ளையுமாக சென்று கொண்டு இருந்தவர்களை மோதி மதிலை உடைத்து வீட்டினுள் நுழைந்துள்ளது.

வாகனத்தின் டயரின் கீழ் இருந்து சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் பிள்ளை நினைவற்ற நிலையில் மீட்க்கப்பட்டதுடன் தாயும் பலத்த காயத்துடன் மதில் ஓரத்தில் தூக்கியெறியப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்கள்.

பின்னர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருந்து உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மல்லாகம் சந்தியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த தெல்லிப்பளை பொலிஸார் உடனடியாக சாரதியை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .