2025 ஜூன் 19, வியாழக்கிழமை

எழுதுமட்டுவாள் வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 12 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

இன்று மாலை எழுதுமட்டுவாளில் இடம்பெற்ற வாகன விபத்தில் 29 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் எழுதுமட்டுவாளில் மோட்டார் சைக்கிளொன்றும் ஹண்டர் ரக வாகனமொன்றும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாலசுப்ரமணியம் என்ற இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். வட்டுக்கோட்டையில் வசிக்கின்ற குறித்த நபர் தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்சமயம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹண்டர் வாகனத்தின் சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைதுசெய்துமுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .