2025 ஜூன் 19, வியாழக்கிழமை

தீக்காயங்களுக்குள்ளான இளைஞர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 04 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

தீக்காயங்களுக்குள்ளான இளைஞரொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அராலி வீதியைச் சேர்ந்த சிவனொளி காண்டீபன் (வயது 17) என்ற இளைஞரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இவ்விளைஞர் அடுப்பை பற்றவைப்பதற்காக அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியதாகவும் இதன்போது பரவிய தீயில் இவ்விளைஞர் எரிவடைந்ததாகவும் அயலவரொருவர் கூறினார்.

தீக்காயங்களுக்குள்ளான இவ்விளைஞர் உடனடியாக சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .