2025 ஜூன் 19, வியாழக்கிழமை

'மின்சாரம் இல்லாத பிரதேசங்களில் சோளர் மின்கலம் பொருத்தப்படும்'

Kogilavani   / 2013 ஜனவரி 04 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
வேலணை பிரதேசத்தில் மின்சாரம் இல்லாத இடங்களில் சோளர் பொருத்துவதற்காகவும் குடிநீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்காக கிணறுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுவருவதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சி.சிவராசா தெரிவித்தார். 

ஆளுநரிடம் கோரப்பட்டதற்கு அமைவாக வேலனையில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைவாக, மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து வேலணைப் பகுதியில் துறையூர், அம்பிகைநகர், மண்டைதீவு, புங்குடுதீவு,
சாட்டி போன்ற இடங்களில் உள்ள இந்து மயானங்களுக்கு எரிகொட்டகைகள், மடங்கள் என்பன புனரமைக்கப்படுகின்றன.

இத்துடன் வேலணை பிரதேச சபையின் உப அலுவலகங்கள் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, வேலணை புங்குடுதீவு, நயினாதீவு ஆகியவையும் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.

வேலணை, சாட்டி போன்ற இடங்களில் கிணறுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டங்களும் நடைபெற்று வருகின்றதாக  அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .