2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மது போதையில் மின் கம்பத்துடன் மோதி ஒருவர் பலி

Kanagaraj   / 2013 ஜனவரி 05 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

மதுபோதையில் மின் கம்பத்துடன் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் யாழில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மூளாய் மேற்கைச்சேர்ந்த தம்பிராஜா வைகுந்தகுமார் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திக்கொண்டு சென்றபோதே வேகக்கட்டுப்பாட்டை இழந்து குறித்த நபர் மின்கம்பத்துடன் இன்றிரவு 9 மணியளவில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடொன்றிலிருந்து அண்மையில் நாடு திரும்பிய குறித்த நபருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .